Thursday, September 15, 2005

கந்தன் காலடியை வணங்கினால்

பாடல்: கந்தன் காலடியை வணங்கினால்
பாடியவர்: டி.எம்.சொந்திரராஜன்

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால்

தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
சிவசக்தி தானே வேலன்
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன்

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்குங்கள் !

4 comments:

தாணு said...

கணேஷ்,
யூனிகோடில் எழுதினீர்களா? என் சிஸ்டத்தில் ஓப்பன் ஆகவில்லையே உங்கள் பதிவு, ஏன்?

பாலதர்ஷன் said...

சிறப்பாக இருக்கின்றது! கணேஸ்

Ganesh Gopalasubramanian said...

@தாணு

யுனிகோடில் தான் பதிவுகள் அமைந்திருக்கின்றன. ஆனால் கொடாநிலை (default)
நிலையில் யுனிக்கோட் இல்லை. என்னவென்று கவனிக்கிறேன்.

@பாலந்தர்ஷன்
நன்றி பாலன்

G.Ragavan said...

நல்ல பாடல். அருமையான பொருள். மிகவும் ரசித்துப் படித்தேன்.

யுனிகோட் செட்டிங்சில் ஏதோ தவறு இருக்கிறது என நினைக்கிறேன் கணேஷ். சரி பார்க்கவும்.